புதன், 20 ஆகஸ்ட், 2014

"நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி ..."

"நா ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி ..."


சொன்னவர் சூப்பர் ஸ்டார் 
பாட்சா என்ற படத்தில் ..


இந்த சொற்கள் முன் 
எல்லாம் மண்டியிட்டது.
தேர்தல் காலத்தில் 
மைக்கு மரங்கள் உதிர்த்த இலைகள் எல்லாம் 
இவைதான்.
இளைஞர்கள் எல்லாம் 
இதயங்களை எல்லாம் அடகு வைத்த  இடமும் 
இந்த சொற்கள்தான் .

அட  போங்கப்பா ..ஜோலிய பாத்துக்கினு ..
கொசு மொலு மொலுன்னு நூத்துக்கும் மேலே  மொய்ச்சுது 
தூக்கம் வராம தட்டுனேன் 
ஒரு கொசு தான் செத்து விழுந்துது .
அத "பஞ்ச்" டைலாக்னு அள்ளிகினு போய்ட்டாங்க 
அந்த ஒத்த செத்த கொசுவுக்கு 
லட்சக்கணக்காய் விட்டில்கள் 
இந்த இறகுக்குவியல்களிலா உங்கள் 
இரவு விடியல்கள் ?

=============================================ருத்ரா 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக