ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

முரசொலிகள் அதிர்கின்றன!

 என் இனிய நண்பர்களே!

___________________________________________________22.07.2022


உங்களை உற்று நோக்குவது என்பது உங்கள் உள்ளத்தை சிந்தனையை உள் பொதிந்திருக்கும் உட்கிடக்கையை உரசிப்பார்ப்பது ஆகும்!

அறிவு நுட்பத்தை அதன் உட்பொருளான மூளையை மற்றும் இதயத்தை எல்லாம் ஒன்று திரட்டி

ஒரு பேசுகருவி (மைக்) ஆக்கிக்கொள்ளுங்கள்.


இப்போது நீங்கள் பேசுகிறீர்கள்.


அன்பான மக்களே இப்போது தான் நாம் ஓட்டு போட்டு ஒய்ந்திருக்கிறோம்.நம்மோடு நம் தோள் மீதே அமர்ந்து கொண்டு சண்டித்தனம் செய்யும் அந்த "சிந்து பாத்" கிழவன் அதாவது அந்த கோரோனா நம்மை விட்டு அகன்றபாடில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்று இல்லாவிட்டால் நாற்காலியை விட்டு ஓடு என்று தொனிக்கும்படியாக வண்டி வண்டியாக வாக்குறுதிகளை சென்ற ஆட்சியில் பாக்கி வைத்துள்ள இப்போதுள்ள எதிர்க்கட்சி முழங்கி வருகின்றனர்.

வாக்குறுதிகள் தானே இதோ அதை செயல் படுத்தப்போகிறோம். அதுவும் ஏற்கனவே ஆதாரபூர்வமாக மேதகு ஆளுநரிடம் உங்கள் மீது கொடுத்த ஊழல் பட்டியலின் மீது

விரைவாய் ஆனால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போகிறோம்.உங்கள் கூட்டணிக்கட்சியினரும் கொடுத்த அதே ஊழல் மலைகள் மீது தான் சட்டம் பாயப்போகிறது.

இப்போது அதை சதி என்றும் அரசியல் காழ்ப்பு என்றும் கூறி திசை மாற்றப்பார்க்கிறீர்கள்.

கடந்த நான்கு வருடங்களாய் இதோ உங்களுக்கு சிறை அதோ உங்களுக்கு தண்டனை என கண்ணாமூச்சி ஆடிய உங்கள் கூட்டணியின்  ஒன்றிய அரசு காட்டிய பாவ்லாக்களும் அதற்கு நீங்கள் காட்டிய விசுவாசமும் ஊர் மறக்குமா? உலகம் மறக்குமா? கொடநாடு என்ற ஒரு குடையை வைத்து ஆட்சி செய்வதாய் காட்டிய பாசாங்குகளில் குடை கந்தலானது தான் மிச்சம்.

அந்த கொட நாட்டின் கொலை மர்மம் இந்தியாவையே நடுங்கவைத்துக்கொண்டிருக்கிறது.அதன் நிழல் உங்கள் மீது தானே விழுந்திருக்கிறது.அது பற்றிய விசாரணையும் எங்கள் முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் தானே? அதை நிறைவேற்ற நாங்கள் தயார்? அதை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? கொலை காரர்களின் கொடிய விரல் நகம் உங்களிலிருந்து தானே நீண்டிருப்பதாய் தரவுகள் பறை சாற்றுகின்றன.அதற்கு நீங்கள் ஆடும் புலியாட்டங்கள் எங்களிடம் பலிக்காது...."


இப்போது இப்படித்தான் தான் கோட்டையில் கொடி பறந்து நியாயம் கேட்டு முரசொலிகள் அதிர்கின்றன!


----------------------------------------------------------------------------------------------------------

-ருத்ரா 


ஜெயிலர்

 ஜெயிலர்

--------------------------------------------------------------

ருத்ரா  



ரஜினி 

சூப்பர்ஸ்டார் என்ற செங்கோலை 

நன்றாக தூக்கிக்காட்டி விட்டார்..

வசூல் ஒரு வாரத்துக்குள் 

நானூறு கோடி என்றால் சும்மாவா?

இந்த உலகத்துக்கே

ஒரு மூக்கும் விரலும் மட்டுமே இருக்க்கிறது 

மூக்கில் விரலை வைத்து 

வியந்து கொள்ள.

இயக்குநர்  நெல்சன் திலீப் குமார் 

தனியாக ஒரு இமயத்தையும் சிகரத்தையும் 

படைத்துவிட்டார் 

அதில் ஏறி  கொடி அசைக்கிறார்.

அந்த வெற்றிக்கொடியே "ரஜினி".

படத்திற்கு சிறப்பு முத்திரை எல்லாம் 

எதுவுமே இல்லை

விளிம்புகளை எல்லாம் உடைத்துக்கொண்டு 

வன்முறையின் கோரமுகம் கொப்பளிக்கிறது.

இதற்கு ஒரு அலிபியை 

வில்லன் ஏற்கனவே அரங்கேயேற்றியிருப்பார்.

இப்படித்தான் 

கிருஷ்ணர் வந்து 

சம்பவாமி யுகே யுகே என்பார்.

பாசிபிடித்துப்போன 

இந்த ஒரு வரிக்கதையைத் தான் 

ட்ரேக் ரிக்கார்டு ஆக்கி 

சினிமாக்களும் ஆட்சிகளும் 

சாதி மத

ரோடு ரோலர்களை வைத்துக்கொண்டு 

மனிதப்புழுக்களை 

கூழாக்கியிருக்கின்றன.

சத்தியாஜித் ரே என்ற ஒரு மானிடவெளிச்சம் 

காமிராவுக்குள் இருந்த 

இருட்டுக்குடலை உருவி 

மின்னல் தெறிப்புகளாய் ஆக்கி 

ஒரு சரித்திரம் தந்தாரே 

அதெல்லாம் எங்கே போனது?

சரி போகட்டும்.

இந்த நானூறு கோடிகளுக்கு 

நாமும் வைப்போம் ஒரு சல்யூட்.


------------------------------------------------------------------------










புதன், 3 ஆகஸ்ட், 2022

எழுபத்தைந்தாண்டு சுதந்திரம்!

 எழுபத்தைந்தாண்டு சுதந்திரம்!


வல்லூறுகளுக்கு வாய் ஊறுகின்றன.


இந்த ஜனநாயகத்தின்


தசை வேறு எலும்பு வேறாய்


பிய்த்து தின்க.


அவை


நம் தேசப்பிதாவின் நிழல்


நீட்டிய கைத்தடியில்


துப்பாக்கியை 


செருகி வைக்கப்பார்க்கின்றன.


"ஹே ராம்"


பளிங்கிலே செதுக்கப்பட்ட‌


அந்த சொற்களிலே


இன்னும் குருதியின் ஈரத்தில்


மொய்க்கும் ஈக்கள்


யாரை அடையாளப்படுத்துகின்றன?


தேசப்பிதாவையா?


அந்த "ரகுபதி ராகவனையா"?


ராமனைக் கொன்றுவிட்டா


இங்கே


ராமனுக்கு "பாராயணங்கள்"?


_________________________________________________


ருத்ரா

திங்கள், 25 ஜூலை, 2022

வாழ்க திராவிடம்!

 வாழ்க திராவிடம்!

_______________________________________

ருத்ரா




வேதகாலத்தில் 

பழங்குடிகள் என்பவர்கள்

பயங்கரமானவர்கள்.

காற்றில் எனக்கு மட்டும் கேட்டவை இவை

என்று

மீசை தாடிப்புதருக்குள் 

இருந்து அவர்கள் ஒலியெழுப்பினார்கள்.

நான் மட்டுமே ஒலிப்பேன்.

இன்னொருவர் செவிக்குள் அது

நுழைந்து 

அவர் வாயால் ஒலிக்கப்பட்டால்

அது எச்சில் தான் என்றார்கள்.

அவர்களே ரிஷிகள் எனப்பட்டார்கள்.

அவர்கள் அங்கே வருவதற்கு முன் 

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்

அங்கே இருந்த பழங்குடிகள்

அவர்களுக்கு பகைவர்கள் ஆனார்கள்.

அவர்கள் மொழி 

இவர்களுக்கு புரியாததால்

அது "பிசாசு மொழி"ஆனது.

"நம் யாகங்களை அழித்து விடுவார்கள்.

இந்த சப்பை மூக்கி கருப்பர்கள்

மந்திரம் ஏவி நம்மை அழித்துவிடுவார்கள்.

என்றார்கள்.

விரைவாக ஓடும் குதிரையின் கால்களை

அவர்கள் வேதம் "த்ராவிட பாணி"என்கின்றது.

இந்த சப்பைமூக்கி கருப்பர்களும்

குதிரைகள் போல் 

மின்னலென தோன்றி மின்னலென‌

விரைவாக மறைந்து விடுவதால்

த்ராவிடர்கள் என அழைக்கப்பட்டார்கள்.

சரி.

அதெல்லாம் போகட்டும்.

இப்போது நமக்கு ஒரு பழங்குடி இனத்தவர்

குடியரசு தலைவர் ஆகிவிட்டாரே.

என்ன தான் குருதட்சிணை மூலம்

கட்டை விரலை வெட்டி வாங்கிக்கொண்டாலும்

நம் மகுடத்தை அவர்கள் 

தலையில் சூடவேண்டிய 

அவலம் வந்து இருக்கிறதே.

நம் யுத்த தந்திரத்தில் இதுவும் ஒன்று

என்று

அந்த முண்டங்களுக்கு புரியவா போகிறது

என அந்த துரோணாச்சாரியர்கள்

தமக்குள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.

அவர்கள் பல்லை நற நறத்துக்கொண்டு

பூங்கொத்துக்களை கொடுப்பதில்கூட‌

அந்த ஒலி நமக்கு 

கேட்கத்தான் செய்கிறது.

தமிழ் நாட்டு ஸ்டாலின் தந்த‌

"திராவிட பாணி" அரசு

இப்போது இந்தியா முழுமைக்கும் 

வந்து விட்டதே!

அது பொம்மையோ பொய்மையோ

அதுவே இப்போது உண்மை.

வாழ்க திராவிடம்! வெல்க திராவிடம்!



_________________________________________________

புதன், 20 ஜூலை, 2022

நாட்டு நடப்பு...

 நாட்டு நடப்பு....

__________________________________________

ருத்ரா




என்ன தான் செய்வது?

நாட்டு நடப்புகளில்

பீதியும் ஏறுகிறது.

பீபியும் ஏறுகிறது.

முப்பது நாப்பது 

வருடங்களுக்கும்

நாங்களே தான் 

என்கிறார்கள்.

இந்த கணிப்பொறிகள்

கூட‌

ஓட்டை ஒடசல் 

ஈயம் பித்தாளைக்கு

பேரிச்சம் பழம் தானா?

நல்லாத்தான் இயங்குதுன்னு

சொல்லும்போதே

எத்தனை பட்டன் தட்டினாலும்

ஒரே பூவத்தான் காட்டுதுன்னு

சொல்றாங்களே.

இதத் தான் இன்னும்

ஒரே தேசம் ஒரே மொழின்னு

சொல்றாங்களோ.

சில மாநிலங்களிலே

தலைகீழால்ல ரிசல்ட் காட்டுது.

அங்கெல்லாம் 

அப்படியே விட்டாத்தானே

இங்கே மாத்தறத‌

ஒண்ணும் சொல்லமாட்டங்க.

நமக்கு வேண்டிய எண்ணிக்கையை

இங்கேயே எடுத்துக்கிட்டு

புனித வேடம் போட்டுக்கிடலாமே.

என்னமோ போங்க.

நாட்டு நடப்பு புரியலைங்க.

திங்கற சோத்துல‌

வரிவந்து தொண்டையப்பிடிக்குது.

பெட்ரோல் வெல ஏறிகிட்டே போகுது.

பொறுத்துக்கிடுங்க

நாளைக்கு மாட்டு மூத்திரத்திலே

பெட்ரோல் வருதுன்னு கூட‌

சொல்வாங்க.

எதுத்து ஏதும் முனங்கினா

தேசவிரோதம்னு சொல்ற‌

மசோதாக்களை

மடியில நெறைய வச்சுகிட்டு

நாடாளுமன்றத்துக்குள்ள வர்ராங்க.

திரும்பி போரப்ப 

அத்தனையும் சட்டம் தான்.

எல்லா மதத்துக்கும் இடம்கொடுக்கிற‌

அரசியல் சட்டம் இனி தேவையில்லை.

இந்து தர்மம் இருக்கும்போது

மத்த கர்மமெல்லாம் எதுக்குன்னு

தலைமைக்காவி

ருத்திராட்சத்தை உருட்டி உருட்டி

உறுமுதாம்.

என்ன பண்றதுங்க...

நாட்டு நடப்பு வெளங்கலே.

வெளக்க ஏத்து.

தாம்பாளத்தை தட்டுங்க்றாங்க...

"நாட்டு நடப்பு......."

சொல்லி முடிக்கிறத்துக்குள்ளே

புல் டோசர் வந்து

கூழாக்கிட்டு போய்ட்டுது.


_____________________________________





தூர எறியுங்கள்

 தூர எறியுங்கள்

_____________________________________________‍‍______

ருத்ரா



சுவரில் ஒரு படம்.

பயங்கரமான ஒரு படம்.

கோரைப்பல் துருத்த நாக்கு தொங்க‌

கையில் பட்டாக்கத்தியுடன்

இடுப்பில் 

வெட்டப்பட்ட கைகள் கோர்த்த 

அரை ஆடையில்

ஒரு ஆவேச உருவம்.

அந்த உருவம் கால் கொண்டு மிதிக்க‌

அடியில் நசுங்கிக்கிடக்கும் உருவமோ

"சிவனின்"உருவம்.

அய்யோ! இது என்ன காட்சி?

சிவனை வதம் செய்யும் காளியா?

நம் மார்பு படபடக்கிறது.

இங்கே

யார் யாரை புண்படுத்துகிறார்கள்?

இந்து மதத்தை

தத்துவம் தத்துவமாக தோலுரிகின்றவர்களே.

புராணம் புராணமாக‌

புரட்டுபவர்களே.

இந்த படக்காட்சியை வைத்துக்கொண்டு பார்த்தால்

"சைவ"த்துக்கும் "சாக்த"த்துக்கும்

இடையே ஒரு ரத்த ஆறு அல்லவா ஓடும்?

நம் அறுமதங்களுக்குள்ளேயே

இத்தனை ரத்தக்களரிகளை வைத்துக்கொண்டு

ஏசு பிரானையும்

அல்லாவையும்

நாம் வம்புக்கு இழுப்பது

என்ன நியாயம்?

வெறும் வெறியை வைத்து ஒழுகும்

மதநீரில்

நம் மண்ணும் மாண்பும் 

கறை பட்டு போகும் காட்சிகள் 

ஏன் உங்கள் கண்களுக்கு

புலப்படவில்லை?

நாலு வர்ணத்துக்குள்ளும்

நாலாயிரம் வர்ணங்களில்

சாதி வெறி பூசி

"மனிதம்"கந்தல் கந்தலாய்

கிழிக்கப்படுவதைக்கண்டு

கொஞ்சமும் கவலைப்படாமல்

உங்கள் மனம் மரத்துப்போய்க்கிடப்ப‌து தான்

சனாதனமா?

அருமையிலும் அருமையான‌

நண்பர்களே!

மானிட அன்பின் வாசனை இல்லாத‌

சித்தாந்தங்களை

குப்பையில் எறியுங்கள்.

சிந்தனை வறண்ட 

பாழ்நிலங்களை பாதுகாக்கும்

சோளக்கொல்லை பொம்மைகள் அல்ல நாம்!

போதும்

இந்த பூச்சாண்டித்தனங்களும்

பொய்மைச்சீற்றங்களும்.

அன்பு தான் சிவம்.

திரி சூலங்கள் அல்ல.

தூர எறியுங்கள் அந்த

ஆயுதங்களை!


______________________________________________________________________


செவ்வாய், 19 ஜூலை, 2022

இ எம் ஜே

 இ எம் ஜே

__________________________________________

செங்கீரன்



இறந்தவர்கள் அவதாரபுருஷர்களாய்

முகம் காட்டுவது

இந்தியாவின் மரபு.

இ எம் ஜே எனும்

எங்கள் அன்பான தோழனே!

உன் கையில் எப்போதும் 

இறவாத சுடரேந்தியாய்

சூரியக்குஞ்சுகளுக்கு கூட‌

இந்த வானத்தில் அவை 

எப்படி 

எப்போது 

சிறகு விரிக்கும் என்று

வகுப்புகள் எடுக்கும்

அந்த மகத்தான "மார்க்சிய மனிதத்தின்"

விடியல் புத்தகத்தை அல்லவா

கையில் வைத்திருந்தாய்!

உன் இதயம் துடிப்பதை நிறுத்திவைத்து

கொக்கரித்த அந்த தருணங்கள்

எப்படியோ செத்து ஒழியட்டும்.

உன் சொற்பொழிவுகளின் போது

உன் விரல்கள் செதுக்கிய காலச்சிற்பத்தின்

சிந்தனை இடுக்குகளில்

அந்த வெளிச்சம் இன்னும்

கசிந்து கொண்டே இருக்கிறது.

அதில் தினமும்

எங்களுக்கு ஆயிரம் சூரியன்கள்.

உன் கருத்துகள் கனியட்டும்.

உன் நினைவுகளின் நிழல்கள் 

எங்கள் மீது விழுந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க!வாழ்க! நீ

என்றும் வாழ்கவே.


________________________________________________________