செவ்வாய், 19 ஜூலை, 2022

இ எம் ஜே

 இ எம் ஜே

__________________________________________

செங்கீரன்



இறந்தவர்கள் அவதாரபுருஷர்களாய்

முகம் காட்டுவது

இந்தியாவின் மரபு.

இ எம் ஜே எனும்

எங்கள் அன்பான தோழனே!

உன் கையில் எப்போதும் 

இறவாத சுடரேந்தியாய்

சூரியக்குஞ்சுகளுக்கு கூட‌

இந்த வானத்தில் அவை 

எப்படி 

எப்போது 

சிறகு விரிக்கும் என்று

வகுப்புகள் எடுக்கும்

அந்த மகத்தான "மார்க்சிய மனிதத்தின்"

விடியல் புத்தகத்தை அல்லவா

கையில் வைத்திருந்தாய்!

உன் இதயம் துடிப்பதை நிறுத்திவைத்து

கொக்கரித்த அந்த தருணங்கள்

எப்படியோ செத்து ஒழியட்டும்.

உன் சொற்பொழிவுகளின் போது

உன் விரல்கள் செதுக்கிய காலச்சிற்பத்தின்

சிந்தனை இடுக்குகளில்

அந்த வெளிச்சம் இன்னும்

கசிந்து கொண்டே இருக்கிறது.

அதில் தினமும்

எங்களுக்கு ஆயிரம் சூரியன்கள்.

உன் கருத்துகள் கனியட்டும்.

உன் நினைவுகளின் நிழல்கள் 

எங்கள் மீது விழுந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க!வாழ்க! நீ

என்றும் வாழ்கவே.


________________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக