வியாழன், 24 செப்டம்பர், 2015

மைக்குகளின் காடுகள்



மைக்குகளின் காடுகள்
=========================================ருத்ரா




கலைஞர்
=========


தமிழர்களே தமிழர்களே
நீங்கள் கடலில் தூக்கிப்போட்டாலும் ...
தமிழர்களையே  கடலில் தூக்கி
வீசியெறியப்படும் நிலையை க்கூட
அறியாத தமிழர்களை நோக்கியா
இப்படி கவிதை எழுதுகிறார் !
அவரது நம்பிக்கை
எந்தக்கடலாலும்
மூழ்கடிக்கப்பட முடியாத
"தமிழ் " எனும் பெருங்கடல் !


தளபதி
======

தமிழன் எழுச்சியை
மைல் கல் தோறும்
நட்டு வளர்த்தாலும்
தமையன் வடிவில்
குடும்ப நிழல் ஒன்றும்
சூறையாடத்துடிக்கிறதே .
சூழ்கின்றவர்கள்
யார் யார் மசால் வாசனை பிடித்து
மொய்க்கின்றார்கள்
என்பதை அறியும் கூர்த்த சிந்தனையே
இந்த தளபதிக்கு தேவையான வாள் !


வைகோ
========

ஈழத்து வெளிச்சம் வைத்து
தமிழின் விட்டில் பூச்சிகளை
பிடிக்க நினைத்தவருக்கு
பக்கத்து சேரத்து தமிழன் கூட
கொடும்பகைவன் ஆகிப்போனான்.
அந்த முல்லையாறு தானே
இன்னும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று
"கல் பொருது இறங்கும் மல்லல் பேர் யாறாக "
மணிச்சுடர் வீசிககொண்டிருக்கிறது.
ஆனால் இவரோ
ஒரு கலிங்கப்பட்டிகாரனைகாப்பாற்றுகிறேன்
என்று
திருநெல்வேலிக்காரன் மீதும் 
படையெடுப்பார் போலும் !





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக